பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சில தினங்களுக்கு முன்பு இலங்கை போலீசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்
இஸ்லாம் பற்றி அவதூறு பரப்பிய காரணத்துக்காகவே இவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
அந்த வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இனியும் காலத்தை வீணடிக்காமல் ஒரே நேரத்தில் என்னை கொலை செய்து விடுங்கள் தன்னை தூக்கிலிடுவதற்கு கொழும்பு நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்
இது தொடர்பில் அவர் அங்கே தெரிவித்துள்ளதாவது
நான் ஒரு பௌத்த துறவி 20 வருடங்களாக இலங்கையில் இருக்கின்ற இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக நான் போராடி வருகிறேன்
தயவுசெய்து இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதற்கு பதிலாக என்னை தூக்கிலிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் கேட்டுக் கொண்டுள்ளார
இதுக்கு பதில் அளித்த நீதிபதி தீர்ப்பு அல்லது வழக்குடன் தொடர்புபட்ட விடயத்தை பரிசீலிக்கும் திறன் நீதிமன்றத்திற்கு இருக்கிறது ஆனால் வழக்கிற்கு வெளியே உள்ள விடயங்களில் தலையிடுகின்ற திறன் நீதிமன்றத்திற்கு இல்லை என்று அவரிடம் கூறியுள்ளார் மேலும் வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பில் உங்களுக்கு திருப்தி இல்லை எனின் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு நீங்கள் முயற்சிக்கலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்